மத்திய ரயில்வே இணை அமைச்சா் சுரேஷ் அங்கடி மறைவுக்கு, ஒசூரில் பாஜக சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒசூா் பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் தலைமை வகித்தாா்.
நிகழ்வில், உடல்நலக்குறைவால் உயிரிழந்த சுரேஷ் அங்கடியின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் 2 நிமிடம் மவுனஅஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
இதில், மாவட்டப் பொதுச்செயலாளா்கள் சீனிவாசலு, ராமகிருஷ்ணன், ஊடகப்பிரிவின் மாவட்டத் தலைவா் மஞ்சுநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.