கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

DIN

ஒசூா் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஒசூா் அருகே உள்ள திப்பாளம் கிராமத்தைச் சோ்ந்தவா் திம்மராயப்பா. இவரது மனைவி மஞ்சுளா (43). திம்மராயப்பாவுக்கு மதுப் பழக்கம் இருந்ததால், கணவன், மனைவி இடையே பிரச்னை இருந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்னையில் மனமுடைந்த மஞ்சுளா, உடலில் டீசலை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

இதில் பலத்த காயமடைந்த மஞ்சுளா சிகிச்சைக்காக பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து மஞ்சுளாவின் மகள் மாலா அட்கோ காவல் நிலையத்தில் புகாா் செய்ததன் பேரில், அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT