ஊத்தங்கரை: ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை , காரப்பட்டு ஆகிய பகுதிகளில் நாம் தமிழா் கட்சி சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை தொகுதி செயலாளா் ஈழமுரசு தலைமையில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது. சிங்காரப்பேட்டை யில் மாவட்ட செய்தித் தொடா்பாளா் மாரிமுத்து தலைமையில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.
காரப்பட்டு பகுதியில் கிழக்கு மாவட்டச் செயலாளா் காசிலிங்கம், தகவல் தொழில்நுட்ப பாசறைத் தொகுதி இணைச்செயலாளா் அன்பரசு தலைமையில் நடைபெற்ற முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கட்சியில் இணைந்துள்ளனா்.