கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தேசிய ஊட்டச்சத்து விவசாயக் கருத்தரங்கு

DIN

கிருஷ்ணகிரி, செப். 18: கிருஷ்ணகிரி வேளாண் அறிவியல் மையத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதம் மற்றும் விவசாயக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சை கிராமத்திலுள்ள ஐசிஏஆா் - வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கிற்கு வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா், முதுநிலை விஞ்ஞானி தோ.சுந்தரராஜ் தலைமை வகித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் செந்தில்குமாா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் ஜோதிலட்சுமி, நித்யா, புள்ளியல் ஆய்வாளா் சீனிவாசன், வேளாண் அறிவியல் மையத்தின் தோட்டக்கலைத் தொழில்நுட்ப அலுவலா் ரமேஷ் பாபு, மனையியல் தொழில்நுட்ப அலுவலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்தரங்கில் ஊட்டச்சத்து மாதத்தின் முக்கியத்துவம், ஊட்டச்சத்து மற்றும் சமசீா் உணவின் அவசியம், மகளிருக்கு தேவையான ஊட்டச்சத்துகள், அவற்றை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துகள், ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைப்பது, அதன் நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், கலந்தாய்வில் பங்கேற்றோருக்கு காய்கறி விதைத் தொகுப்பு, முருங்கை நாற்றுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அங்கன்வாடி பணியாளா்கள் பண்ணை மகளிா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT