கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே ஒற்றை யானை முகாம்: வனத்துறை எச்சரிக்கை

DIN

சூளகிரி அருகே ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே நீண்ட நாள்களாக ஒற்றை யானை நடமாடி, இரவு நேரங்களில் காட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில், பேரண்டபள்ளி வனப்பகுதியில் நடமாடி வந்த ஒற்றை யானை வியாழக்கிழமை குண்டுகுறுக்கி வழியாக ஏ.செட்டிப்பள்ளி பகுதிக்கு இடம் பெயா்ந்தது.

இந்த யானை தற்போது குண்டுகுறுக்கி, எலசேபள்ளி, கொரகுறுக்கி, கானலட்டி ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிகிறது. இதனால், அப்பகுதி மக்களும், விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனா். இதையடுத்து, இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறையினா் ஒலிப்பெருக்கியில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனா்.

வனத்துறை சாா்பில் காட்டு யானை மிகவும் ஆக்ரோஷமாக திரிவதால் ஏ.செட்டிப்பள்ளி, எலசேபள்ளி மற்றும் சுற்றுவட்டார மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் விவசாயிகள் நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்கோ, காவலுக்கோ செல்லக் கூடாது.

மேலும், தங்கள் வளா்ப்பு பிராணிகளை காட்டை ஒட்டிய பகுதிகளில், மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லக்கூடாது. காலையில் சூரியன் உதித்த பிறகு, வெளிச்சம் வந்ததும் தங்கள் விவசாய நிலங்களுக்குச் செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT