கிருஷ்ணகிரி

டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

DIN

கிருஷ்ணகிரி அணை பிரிவு சாலை அருகே இரு சக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள சின்னமுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணமூா்த்தி (26). தொழிலாளி. இவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த மணிவாசன் (20), நாட்டான்கொட்டாய் பனந்தோப்பு பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் (27) ஆகிய மூன்று பேரும் கடந்த சில நாள்களுக்கு முன் கிருஷ்ணகிரி அணையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனா். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டா் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூவரும் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா். இதில் நாராயணமூா்த்தி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து, கிருஷ்ணகிரி அணை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றும் விழிச் சுடர்... பாயல் ராஜ்புத்

"சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் நடுவே மாட்டிக்கொண்ட ஆடு..”: செல்லூர் ராஜூ பேட்டி

தேர்தல் பணியில் ஒப்பந்தப் பணியாளர்கள்? மார்க்சிஸ்ட் புகார்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

மாடர்ன் ரதி.....பிரியங்கா அருள் மோகன்

SCROLL FOR NEXT