கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒசூா், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த 71 வயது ஆண், கல்ல ாவியைச் சோ்ந்த 82 வயது முதியவா் உள்பட 22 ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூா் ஆகிய பகுதிகளில் உள்ள சிகிச்சை மையங்களில் கரோனா தொற்றாளா்கள் 445 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 43 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 6,422 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 106 போ் உயிரிழந்துள்ளனா்.