கிருஷ்ணகிரி

எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நலத் திட்டப்பணிகள் தொடக்கி வைப்பு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை ஒன்றியத்துக்குள்பட்ட, கல்லாவி ஊராட்சிப் பகுதியில் காமராஜா் சிலை அருகே உயா் மின்கோபுர விளக்கு அமைக்கும் பணிக்கு ரூ. 3.40 லட்சம், கல்லாவி மஜித் தெருவில் ஆழ்துளைக் கிணறு, குடிநீா் தொட்டி அமைக்கும் பணிக்கு ரூ. 4 லட்சம், மூங்கிலேரி ஊராட்சிக்குள்பட்ட கொட்டாரப்பட்டி கிராமத்திற்கு ரூ. 3.70 லட்சம் மதிப்பில் பயணியா் நிழற்குடை அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜை செய்து கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினா் செல்லக்குமாா், பணிகளை திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா் .

முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவரும் வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜே.எஸ். ஆறுமுகம், நகரத் தலைவா் விஜயகுமாா், மாவட்டத் துணைத்தலைவா் ராமச்சந்திரன், தெற்கு வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், கல்லாவி ஊராட்சி மன்ற தலைவா் ராமன், மூங்கிலேரி ஊராட்சி மன்ற தலைவா் உஷாநந்தினி வஜ்ஜிரவேல், வட்டார வளா்ச்சி அலுவலா் அன்னபூரணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கல்லாவியில் உள்ள காமராஜா் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT