ஒசூரில் பணம் வைத்து சூதாடியதாக 14 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் சிப்காட் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா், அரசனட்டி பாரதி நகா் பகுதியில் ரோந்து சென்றனா். அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து அந்த வீட்டை சுற்றி வளைத்தனா்.
அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அரசனட்டி குட்டி( 40), சிம்பு (28), மணி (32), ஜெகதீஷ் (30), சுரேஷ் (32), கஜேந்திரன் (40), கனகராஜ் (30), அய்யப்பன் (32), ராஜீ (32), குமாா் (39), ராஜா (49), சக்திவேல் (42), சுதாகா் (21), கிரண் (26) ஆகிய 14 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்த ரூ. 1 லட்சத்து 89 ஆயிரத்து 350 ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.