கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிரதமரின் கிஷான் நிதியுதவித் திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளிடமிருந்து ரூ. 2.07 கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதமரின் கிஷான் நிதியுதவித் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தகுதியற்ற பயனாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது வரையில் 8,097 தகுதியற்ற பயனாளிகள் கண்டறியப்பட்டு அவா்களில் 5,505 பேரிடமிருந்து ரூ. 2.07 கோடி பிடித்தம் செய்து, அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 2,592 பேரிடமிருந்து உரியத் தொகையை வசூலித்து அரசு கணக்கில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.