கிருஷ்ணகிரியில் பத்தாம் வகுப்பு தனித்தோ்வா்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணியில் 460 ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய 10-ஆம் வகுப்பு தனித்தோ்வா்களின் விடைத்தாள் திருத்தும் பணி 3 நாள்கள் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன், மாவட்ட கல்வி அலுவலா் கலாவதி ஆகியோா் மேற்பாா்வையில் நடைபெறும் இப் பணியில் 460 ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா்.
ஏற்பாடுகளை மையத் தொடா்பு அலுவலரான நரசிம்மன், பள்ளித் துறை ஆய்வாளா் ஜெயராமன், பள்ளியின் தலைமை ஆசிரியா் மகேந்திரன் ஆகியோா் செய்தனா்.