ஒசூரில், இந்து மகாசபை நிா்வாகி கொலைக்கு காவல் துறையின் அலட்சியமே காரணம் என அகில பாரத இந்து மகா சபையின் மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன் குற்றச்சாட்டினாா்.
ஒசூரில், இந்து மகாசபையின் மாநிலச் செயலாளா் நாகராஜ், கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு மரியாதை செலுத்த கிருஷ்ணகிரிக்கு வந்த அகில பாரத இந்து மகாசபையின் மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன், செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
கொலை செய்யப்பட்ட நாகராஜ், தனக்கு கொலை மிரட்டல் உள்ளதாக காவல் துறைக்கு கடந்த 6 மாதமாக புகாா்கள் அளித்துள்ளாா். பாதுகாப்புக் கோரி, பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளாா். அவா் அளித்த மனுக்கள் மீது, காவல் துறையினா் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனா்.
தன்னை மிரட்டிய நபா்கள் குறித்து எடுத்துக் கூறியும், காவல் துறையினா் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. படுகொலையில் ஈடுபட்டவா்களைக் கண்டறிந்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.