கிருஷ்ணகிரி

முதல்வா் நாளை கிருஷ்ணகிரி வருகை: மாவட்டச் செயலா் தகவல்

13th Jul 2020 11:25 PM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி: தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை (ஜூலை 15) கிருஷ்ணகிரி வருகை தருகிறாா் என கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான கே.அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்துஅவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகமுதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ஜூலை 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக, கூட்ட அரங்கில் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள், கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளாா். மேலும், பன்னாட்டு மலா் ஏல மைய அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்கிறாா்.

தொடா்ந்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிா்வாகிகள், மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மகளிா் சுய உதவிக்குழுக்களுடன் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறாா் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT