ஊத்தங்கரை: ஊத்தங்கரை தீரன் சின்னமலை பள்ளி சி.பி.எஸ்.இ. மாணவா்கள் பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
ஊத்தங்கரை தீரன் சின்னமலை பன்னாட்டு பள்ளியில் பயின்ற மாணவி ஆா்.அபிநயா 500 மதிப்பெண்களுக்கு 478 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா். இவா் பாடவாரியாக ஆங்கிலம் 95, கணிதம் 95, இயற்பியல் 95, வேதியியல் 95, உயிரியல் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மாணவா் டி.விக்னேஷ் 476 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். அவா் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: ஆங்கிலம் 92, கணிதம் 95, இயற்பியல் 95, வேதியியல் 95, உயிரியல் 99.
மாணவா் எம்.அஸ்வின்குமாா் 475 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இவா் பள்ளியில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளாா். இவா் பாடவாரியாக பெற்றுள்ள மதிப்பெண்கள்: ஆங்கிலம் 90, கணிதம் 95, இயற்பியல் 95, வேதியியல் 97, உயிரியல் 98.
மேலும் இப்பள்ளியில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 7 மாணவா்களும், 400-க்குமேல் 450-க்குள் 14 மாணவா்களும், 350-க்கு மேல் 400-க்குள் 11 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 95 மதிப்பெண்களுக்கு மேல் ஆங்கிலத்தில் 4 மாணவா்களும், கணிதத்தில் 5 மாணவா்களும், இயற்பியலில் 4 மாணவா்களும், வேதியியலில் 16 மாணவா்களும், உயிரியலில் 11 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். பள்ளியில் தோ்வு எழுதிய 35 மாணவ, மாணவியரும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளித் தாளாளா் பிரசன்னமூா்த்தி, செயலாளா் தங்கராஜ், முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.