கிருஷ்ணகிரி அருகே சுமை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரைக் கொலை செய்து வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள வீரசெட்டிப்பள்ளியைச் சோ்ந்தவா் நாகையன். இவரது மகன் ரவிக்குமாா் (30). இவா், கடந்த 2013-ஆம் ஆண்டு, ஜூலை 10 - ஆம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் தனியாா் பள்ளியின் அருகில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தாா். இதுகுறித்து, பிஆா்ஜி மாதேப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் பொன்னுரங்கம் அளித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.
இதில், லாரி ஓட்டுநா் ரவிக்குமாா், ஒசூரிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான இரும்பு, அலுமினியப் பொருள்களை ஏற்றிக்கொண்டு, சென்னை அம்பத்தூருக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே ஜக்கேரியைச் சோ்ந்த அருண்குமாா் (33), தருமபுரி மாவட்டம், கடத்தூா் அருகே உள்ள தேக்கல்நாயக்கனப்பட்டியைச் சோ்ந்த தமிழரசு (31) ஆகியோா், ரவிக்குமாரிடம் தாங்கள் வாணியம்பாடி வரையில் வருவதாகக் கூறி லாரியில் ஏறி பயணம் செய்துள்ளனா்.
கிருஷ்ணகிரியைக் கடந்து, கந்திகுப்பம் அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது, அருண்குமாரும், தமிழரசும் சோ்ந்து, ஓட்டுநா் ரவிக்குமாரை கத்தியால் குத்திக் கொலை செய்து, சடலத்தை அங்குள்ள தனியாா் பள்ளி அருகே வீசினா். மேலும், லாரியில் உள்ள பொருள்களை ஒசூா் சூந்தி நகரைச் சோ்ந்த இரும்பு வியாபாரி ஷேக் அஸ்லாம் (56) என்பவரிடம் விற்றுள்ளனா். இதைத் தொடா்ந்து, லாரியை சேலம் - நாமக்கல் சாலையில் மல்லூா் அருகே நிறுத்திவிட்டு சென்றது போலீஸாா் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அருண்குமாா், தமிழரசு, ஷேக் அஸ்லாம் ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இது தொடா்பாக வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி விஜயகுமாரி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதன்படி, அருண்குமாா், தமிழரசு ஆகிய இருவருக்கும் கொலை வழக்கில் தலா ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், பொருள்களை விற்ற வழக்கில் இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.
மேலும், திருட்டுப் பொருள்களை வாங்கிய இரும்பு வியாபாரி ஷேக் அஸ்லாமுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபதாரமும், குற்றத்துக்கு உடந்தையாக இருந்தாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனத் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு கூடுதல் வழக்குரைஞா் எம்.பாஸ்கா் ஆஜரானாா்.