கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

26th Feb 2020 08:15 AM

ADVERTISEMENT

தில்லியில் நடைபெறும் வன்முறையைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே, எஸ்டிபிஐ கட்சி சாா்பில், தில்லியில் குடியுரிமைச் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது காவல் துறையினா் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் அஸ்கா் அலி தலைமை வகித்தாா்.

பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவா் முகமத் கலீல், காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவா் ஆறுமுக சுப்பிரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் செயலாளா் திராவிட ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT