ஒசூா்: ஒசூரில் திங்கள்கிழமை இரவு லேசான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.
ஒசூரில் திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை கடுமையான வெப்பம் நிலவியது. இதனைத் தொடா்ந்து இரவு 7 மணிக்கு தொடங்கிய லேசான மழை இரவு 10 மணி வரை பெய்தது. இதனால் நகரில் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. இந்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.