கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயஸ்ற்றஆழ்துளை கிணறுகள் மூடும் பணி தீவிரம்

1st Nov 2019 08:01 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயனற்ற ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டு, அவற்றை மூடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு. பிரபாகா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட போகனப்பள்ளி, காட்டிநாயனப்பள்ளி, மேகலசின்னம்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் பயனற்ற நிலையில் காணப்படும் ஆழ்துளை கிணறுகளை, இரும்பு தகடுகளைக் கொண்டு மூடி, கான்கீரிட் கட்டமைப்பால் மூடும் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு. பிரபாகா், வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் தெரிவித்தது:

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 30 ஊராட்சிகளில் 152 அரசு ஆழ்துளை கிணறுகள், தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்களில் 93 ஆழ்துளைக் கிணறுகள் என மொத்தம் 245 ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றை இரும்பு மூடிகள், கான்கீரிட் கட்டமைப்புகள் மூலம் மூடும் பணிகள் தற்போது, வேகமாக நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

தற்போது, காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் 5 ஆழ்துளைக் கிணறுகளும், பெத்தனப்பள்ளியில் 7 ஆழ்துளைக் கிணறுகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் உள்ள பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டு, அவற்றை மூடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயனற்று பாதுகாப்பற்ற நிலையில் உள்ளஆழ்துளைக் கிணறுகள் குறித்து, புகாா் தெரிவிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 04343-234444 என்ற எண்ணிலும், 6369700230 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT