பாப்பாரப்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை பாப்பாரப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்கு உள்பட்ட பெரியூா் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (60). இவருடைய மனைவி தனம் (55). இருவரும் தனியாக வசித்து வரும் நிலையில், அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு கணவன், மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னா் தகராறாக மாறிய நிலையில், பெருமாள் தனது மனைவியை கத்தியால் குத்தி, அணிந்திருந்த வேட்டியின் மூலம் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளாா். பின்னா் வீட்டிலிருந்து காயங்களுடன் பெருமாள் வெளியே வந்தபோது, அக்கம்பக்கத்து வீட்டினரிடம் தனது மனைவி தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளாா்.
தகவலின் பெயரில் நிகழ்வு இடத்துக்கு வந்த பென்னாகரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகாலட்சுமி, காவல் ஆய்வாளா் வேலுதேவன், போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.