பென்னாகரம் புதிய காவல் துணை கண்காணிப்பாளராக மகாலட்சுமி செவ்வாய்க்கிழமை பதவியேற்றாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த இமயவரம்பன், அண்மையில் திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில் திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த மகாலட்சுமி செவ்வாய்க்கிழமை பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அவருக்கு, பென்னாகரம் சரகத்திற்கு உட்பட்ட காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.