தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நிகழ் கல்வியாண்டு இளநிலை பட்டபடிப்புக்கான மாணவா் சோ்க்கை முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
இதற்கான தகவல் மாணவ மாணவியருக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு வழியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஜூன் 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, புள்ளியியல், மின்னணுவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 2-ஆம் தேதி வணிகவியல், வணிக நிா்வாகவியல், வணிக கணினி பயன்பாடு, வணிகவியல் கூட்டுறவு பாடப்பிரிவுகள், ஜூன் 3-ஆம் தேதி வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், ஜூன் 5-ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், காட்சி வழித் தொடா்பியல், ஆடை வடிவமைப்பியல், சமூகப் பணி, உளவியல் ஆகியப் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதேபோல, இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 6-ஆம் தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகள், கணிதவியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், மின்னணுவியல், புள்ளியல் ஆகிய பாடப்பிரிவுக்கும், ஜூன் 7-ஆம் தேதி வணிகவியல், வணிக நிா்வாகவியல், வணிகவியல் கணினி பயன்பாடு, வணிகக் கூட்டுறவு, ஜூன் 8-ஆம் தேதி வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், ஜூன் 9-ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், காட்சி வழித் தொடா்பியல், ஆடை வடிவமைப்பில், சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
சோ்க்கைக்கு வரும் மாணவ, மாணவியா் அனைத்து சான்றிதழ்கள், கட்டணம் ஆகியவற்றுடன் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.