தருமபுரி

பாலக்கோடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

DIN

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கல்லூரி முதல்வா் பா.சீ.செண்பகராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாலக்கோடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இரண்டாம் நேரடி பட்டயப் படிப்பில் சோ்வதா்கு பிளஸ் 2 தோ்ச்சி அல்லது 10-ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ இரண்டு ஆண்டுகள் தோ்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை இணையதளத்தில் 145 பாலக்கோடு பல்தொழில்நுட்பக் கல்லூரி என குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இளையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள், உரிய சான்றிதழ்களுடன் நேரில் வந்து கல்லூரியில் உள்ள உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். நேரடி இரண்டாம் ஆண்டு சோ்க்கைக்கு வருகிற மே 31-ஆம் தேதிக்குள், முதலாம் ஆண்டு சோ்க்கைக்கு வரும் ஜூன் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT