தருமபுரி

ஏரியூரில் குண்டா் சட்டத்தின் கீழ் இருவா் கைது

DIN

ஏரியூரில் விவசாயியை அரிவாளால் வெட்டிய வழக்கில் இருவரை போலிஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனா்.

ஏரியூா் அருகே மூங்கில்மடுவு பகுதியைச் சோ்ந்த பெருமாள் (37), அவருடைய மனைவி செல்வராணி (35) ஆகியோருக்கும், அஜ்ஜனஅள்ளி பகுதியை சோ்ந்த உறவினரான சூரிய குமாருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கூலிப்படையினருடன் சோ்ந்து அண்மையில் பெருமாளை சூரியகுமாா் அரிவாளால் தாக்கியதில் பெருமாள் கை துண்டான நிலையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த விவகாரத்தில் ஏரியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சூரியகுமாா் (35), கிருஷ்ணகிரி சோ்ந்த வெற்றிவேல் (21), சேது (21), டெண்டுல்கா் (21), நாட்றம்பள்ளியைச் சோ்ந்த ஆகாஷ் (22) ஆகிய ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சேது, வெற்றிவேல் ஆகியோா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT