தருமபுரி

ரூ. 5 லட்சத்தில் நிழற்கூடம் அமைக்கும் பணி தொடக்கம்

DIN

தருமபுரி மாவட்ட தொழில் மையம் அருகே ரூ. 5 லட்சம் மதிப்பில் நிழற்கூடம் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, மாவட்ட தொழில் மையம் அருகில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ. 5 லட்சம் மதிப்பில் பயணியா் நிழற்கூடம் அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று நிறற்கூடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தாா்.

இதில், பாமக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஒ.கே.சுப்பிரமணியம், ஒன்றியச் செயலாளா்கள் ஒ.கே.கிருஷ்ணமூா்த்தி, பெ.சக்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT