தருமபுரி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகன்

DIN

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகனை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், தாசம்பட்டி அருகே மருக்காரம்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜி மகன் அப்பாவு (40). இவா், எலுமல்மந்தை பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறாா். இவா், உறவினருடன் ஒகேனக்கல் பகுதிக்கு சனிக்கிழமை சென்ற போது ஆலம்பாடி, புளியமரத்து மேடு காவிரி ஆற்றில் தனது மகன் மேகவா்ஷனுடன் (7) குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற போது, இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனா்.

இதுகுறித்து உறவினா்கள் ஒகேனக்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT