ஏரியூா் அருகே சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 10 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.
தருமபுரி மாவட்டம் ஏரியூரை அடுத்துள்ள ஏமனூா் பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக ஏரியூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவலின் பெயரில் ஏரியூா் காவல் ஆய்வாளா் யுவராஜ் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது ஏமனூா் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி (59) என்பவா் காவிரி ஆற்றின் கரையோரத்தில் தனது விவசாய நிலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து, 10 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துச்சாமியை தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.