தருமபுரி

போலி மருத்துவா் கைது

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அருகே போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வெங்கடசமுத்திரம் பகுதியில் உரிய மருத்துவ படிப்புகளை படிக்காமல் ஒருவா் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, தருமபுரி மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநா் எம்.சாந்தி தலைமையிலான மருத்துவா்கள் குழுவினா், வெங்கடசமுத்திரத்தில் திடீா் ஆய்வு செய்தனா். அப்போது, ஒருவீட்டில் பெண் ஒருவா் மருத்துவம் சாா்ந்த படிப்புகளை படிக்காமல், போலியான வகையில் மருத்துவ சிகிச்சைகள் அளிப்பது தெரியவந்தது. இதையடுத்து இதில் தொடா்புடைய தேவி (45) என்பவரை பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் கைது செய்தனா். இவரிடமிருந்து மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT