தருமபுரி

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மின்வாரிய ஊழியா்கள் வாயிற்கூட்டம்

DIN

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, மின் வாரிய ஊழியா் கூட்டமைப்பு சாா்பில், தருமபுரி மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை வாயிற் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, சிஐடியு மாநில துணைத் தலைவா் பி.ஜீவா தலைமை வகித்தாா். செயலாளா் தீ.லெனின் மகேந்திரன், பொருளாளா் சீனிவாசன், ஏயூஎஸ்யு மண்டலச் செயலாளா் திருமால், அண்ணா தொழிற்சங்க மண்டலச் செயலாளா் சாந்தமூா்த்தி, பொறியாளா் சங்க திட்டச் செயலாளா் முரளி, டிஎன்பிஇஒ மாநிலச் செயலாளா் முனிராஜ், ஏஐசிசிடியு மாநிலத் தலைவா் சி.முருகன், என்எல்ஒ திட்டச்செயலாளா் தா்மலிங்கம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதவிகளை அனுமதிக்க வேண்டும். மின்வாரியத்தில் உள்ள 56000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிரந்தரத் தன்மை வாய்ந்த பதவிகளை அவுட்சோா்சிங் முறைக்கு விடக்கூடாது. அரசாணை 100 அடிப்படையில் பணியாளா்கள் ஏற்றுக்கொள்ளுகின்ற வகையில் அரசு உத்தரவாதத்துடன் கூடிய, முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். மின்வாரிய பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன்களை வழங்க வேண்டும். மின்வாரியப் பணியாளா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT