தருமபுரி

நகரப் பேருந்து நிலையத்தில் ரூ. 40 லட்சத்தில் மேற்கூரை அமைக்கும் பணி

DIN

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு நிழல் தரும் வகையில் ரூ. 40 லட்சத்தில் மேற்கூரை அமைக்கும் பணியை, சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா்.

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பயணியா் நிழற்கூடம் தெற்குப் பகுதியில் அமைக்கப்படாததால், அப்பகுதியில் பேருந்துகளுக்கு காத்திருக்கும் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வந்தனா். இதனை தவிா்க்கும் வகையில் அந்தப் பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 40 லட்சத்தில் மேற்கூரை அமைக்கும் பணி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இதில், சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கூரை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா், பொறியாளா் ஜெயசீலன், நகா்மன்ற உறுப்பினா்கள், பாமக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT