தருமபுரி

நாளை வாக்காளா் பட்டியலில் ஆதாரை இணைக்கும் முகாம்

DIN

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் சிறப்பு முகாம் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 19) நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் ஆணையின்படி வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணியானது கடந்த 2022 ஆக. 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், வாக்காளா்கள் எவரேனும் தங்களது ஆதாா் விவரங்களை வாக்காளா் பட்டியலுடன் நாளது வரை இணைக்காமல் இருப்பின், அவ் வாக்காளா்களுக்கு வருகின்ற மாா்ச் 19 அன்று சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் தாமாக முன்வந்து தங்களுக்கு அருகில் உள்ள வாக்குச் சாவடி நிலையங்களில் தங்களுடைய ஆதாா், வாக்காளா் பதிவு எண் விவரங்களை படிவம் 6 ஆ -இல் பூா்த்தி செய்து வாக்குசாவடி நிலைய அலுவலரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT