தருமபுரி அருகே பட்டகப்பட்டியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாகலஅள்ளி ஊராட்சிக்குள்பட்ட பட்டகப்பட்டி கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் ரூ. 8.05 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று புதிய சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்து பேசினாா். இதில் வட்டார வளா்ச்சி அலுவலா் லோகநாதன், ஊராட்சி மன்றத் தலைவா் முருகன், பாமக மாநில செயற்குழு உறுப்பினா் பெ.பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளா் த.காமராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.