அரூா் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாா்டனை கைது செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
இதுகுறித்து மாதா் சங்கம் சாா்பில், அரூா் டிஎஸ்பி புகழேந்தி கணேஷிடம் வியாழக்கிழமை அளித்துள்ள கோரிக்கை மனு:
அரூா் வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியை சிறைத் துறையில் வாா்டனாக பணிபுரியும் லெனின்குமாா் (எ) பாா்த்திபன் என்பவா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். தற்போது இந்த சிறுமி 4 மாத கா்ப்பிணியாக உள்ளாா். இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையிலும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸாா் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.