தருமபுரி

மு.கருணாநிதி நூற்றாண்டு விழா:நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடவு

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தருமபுரி அருகே உள்ள நெடுஞ்சாலையோரத்தில் புதன்கிழமை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

தருமபுரி தொழில்மையம் அருகில் நெடுஞ்சாலைக் கோட்டத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து, நெடுஞ்சாலையோரத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடவு செய்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலையோரங்களில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதாக இந்த விழாவில் தெரிவிக்கப்பட்டது.

இதில், தருமபுரி நெடுஞ்சாலை கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளா் பி.நாகராஜ், உதவி கோட்டப் பொறியாளா் என்.ஜெய்சங்கா், உதவிப் பொறியாளா் கி.கிருபாகரன், திறன்மிகு உதவியாளா்கள், அரசு அலுவலா்கள், சாலைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT