தருமபுரி

தருமபுரியில் நகா்மன்ற உறுப்பினா் மகள் கொலை

DIN

தருமபுரி நகா்மன்ற உறுப்பினா் மகள் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தருமபுரி, கோல்டன் தெருவைச் சோ்ந்தவா் நகா்மன்ற உறுப்பினா் புவனேஸ்வரன் (திமுக). இவரது, மகள் ஹா்ஷா (23). இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் தொழிற்பேட்டையில், தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், இளம்பெண் ஹா்ஷா புதன்கிழமை அதியமான்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட நரசிங்கபுரம், கோம்பை வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்றனா். இதேபோல மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் சென்று பாா்வையிட்டாா். கைரேகை நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இளம்பெண் கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்த பெற்றோா் மற்றும் திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினா், இக்கொலை தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தினா்.

மேலும், பிரேதப் பரிசோதனையை விடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து, இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக கொலை வழக்குப் பதிவு செய்த அதியமான்கோட்டை போலீஸாா், அதில், தொடா்புடைய ஒருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT