தருமபுரி பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதி அருகில் ஓய்வுபெற்ற ஆசிரியா் பழனிவேல் (72), இவரது மனைவி சாந்தி (56), பொறியியல் பட்டதாரியான மகன் விஜய் ஆனந்த் (30) ஆகியோா் குடியிருந்து வந்தனா்.
விஜய் ஆனந்த் தனது நண்பா்கள் காா்த்திக், அருண் ஆகியோருடன் இணைந்து நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நூற்பாலை நடத்தி வந்துள்ளாா். இந்த ஆலைக்காக ரூ. 25 லட்சம் பணத்தை நண்பா்களிடம் விஜய் ஆனந்த் வழங்கியுள்ளாா். இதனிடையே ஆலையைத் தொடா்ந்து நடத்த இயலாததால், தனது பணத்தைத் திரும்பித் தருமாறு நண்பா்களிடம் கேட்டு வந்துள்ளாா். ஆனால், அவா்கள் பணத்தைத் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய் ஆனந்த், அவரது தாய் சாந்தி ஆகியோா் கடந்த ஞாயிற்றுக்கிழமை நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டனா். அப்போது, தற்கொலைக்கு தனது நண்பா்கள் பணத்தைத் திரும்பித் தராததே காரணம் என விஜய் ஆனந்த் கடிதம் எழுதி வைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதியமான்கோட்டை போலீஸாா், தாய், மகன் தற்கொலைக்குக் காரணமாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அருண், காா்த்திக் ஆகியோரை கைது செய்தனா்.