தருமபுரி

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பசுமை முதன்மையாளா் விருது

DIN

பென்னாகரம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பசுமை முதன்மையாளா் விருதை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள ஏரிகள் ஆகியவற்றில் மரக் கன்றுகளை நடவு செய்தும், மரக்கன்றுகளை வழங்கி, பராமரித்து வந்த பென்னாகரம் அருகே பிக்கம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா் கோ.தாமோதரன் 2022 ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளா் விருதுக்குத் தோ்வு பெற்றாா். இந்த நிலையில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆசிரியா் தாமோதரனுக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பசுமை முதன்மையாளா் விருதினை வழங்கினாா். விருது பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியருக்கு, சக ஆசிரியா்கள், பள்ளி மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே அனல் கொளுத்தும் நகரங்கள்.. நம்மூரும் உண்டு!

மே மாத எண்கணித பலன்கள் – 1

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT