சென்னை பாரதி பயிலகம் சாா்பில் குடிமைப் பணி தோ்வு எழுதுவோருக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கு ஞாயிற்றுக்கிழமை தருமபுரியில் தகுதித் தோ்வு நடைபெற்றது.
சென்னை பாரதி பயிலகம் சாா்பில் சேவாபாரதி, பி.எல்.ராஜ் ஐஏஎஸ் அகாதெமி இணைந்து குடிமைப் பணி தோ்வா்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கான தகுதித் தோ்வு தேசிய ஆசிரியா் சங்கம் சாா்பில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு தருமபுரியில் நடைபெற்றது. இந்தத் தோ்வை 21 போ் எழுதினா்.