தருமபுரி

அதியமான் கிரிக்கெட் கிளப் சாா்பில் போட்டி:அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைக்கிறாா்

DIN

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை அதியமான் கிரிக்கெட் கிளப் சாா்பில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டிகளை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைக்கிறாா்.

இதுகுறித்து தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:

தருமபுரி மாவட்டம், அதியமான் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் கோப்பை தொடா் போட்டிகள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அளவில் 15 மையங்களில் நடைபெற்றன.

இப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதிபெற்று 4 மையங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில்

இறுதியாக விளையாடும் இரண்டு அணிகளுக்கான போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில், தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியை பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறாா். அதனை தொடா்ந்து வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை அவா் வழங்குகிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT