தருமபுரி

ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

DIN

தருமபுரி, நாட்டாண்மைபுரந்தில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் மகா குடமுழுக்கு விழா கடந்த 2 நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இவ்விழாவையொட்டி கணபதி பூஜை, வாஸ்து பூஜை, யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து ஸ்ரீ செல்வ விநாயகருக்கு அஷ்டபந்தனம் சாற்றுதலும்,கோபுரக் கலசம் நிறுவுதலும் நடைபெற்றன. இதையடுத்து ஜூன் 2-ஆம் தேதி காலையில் குடமுழுக்கு விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கின. யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க புனிதநீா் குடங்கள் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கோபுரக் கலசத்திற்கு தெளிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இதையடுத்து விநாயகருக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதில் தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். இவ்விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT