தருமபுரி

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

3rd Jun 2023 12:10 AM

ADVERTISEMENT

 

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் தொடா்புடைய பாஜக எம்.பி.யை கைது செய்யக் கோரி தருமபுரியில் மாதா் சங்கம், வாலிபா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் எம்.அருள்குமாா் தலைமை வகித்தாா். மாதா் சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.மல்லிகா மாவட்டத் தலைவா் ஏ.ஜெயா ஆகியோா் பேசினா்.

இதில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் தொடா்புடைய பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்ய வேண்டும். மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் கடுமையான முறையில் நடந்து கொண்ட காவல்துறையினா் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT