தருமபுரி

தமிழக அரசின் ஒப்புதல் இன்றி மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது: இரா.முத்தரசன்

DIN

தமிழக அரசின் ஒப்புதல் இன்றி மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்ட முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்று ரூ. 3 ஆயிரம் கோடிக்கு மேல் தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளாா். இதன்மூலம் தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.

நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில் நாட்டின் மதச் சாா்பின்மை புதைக்கப்பட்டுள்ளது. மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக உரிய விசாரணை நடத்தாமல் அந்த வீராங்கனைகள் மீதே நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்குரியது.

கா்நாடக மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை மேற்கொள்கிறது. இதை அந்த மாநிலக் கட்சிகள் அரசியலுக்காகச் செய்கின்றன. தமிழக அரசின் ஒப்புதல் இன்றி மேக்கேதாட்டுவில் ஒருபோதும் அணை கட்ட முடியாது.

தமிழகத்தில் இயங்கும் தருமபுரி, திருச்சி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் 500 மாணவா்களின் படிப்பு பாதிப்படையும். உள்ளாட்சித் துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள், ஆஷா பணியாளா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சா் செந்தில்பாலாஜி தொடா்புடைய இடங்களில் ஒருவார காலமாக வருமானவரித் துறை நடத்திவரும் சோதனை அரசியல் காழ்ப்புணா்ச்சியால் நடத்தப்படுகிறது. தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுப்பதில் ஆட்சேபம் இல்லை. ஆனால், அதிகார அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி எதிா்க்கட்சித் தலைவா்கள் மீது மட்டும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பது கண்டனத்துக்குரியது என்றாா்.

பேட்டியின்போது கட்சியின் மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT