தருமபுரி

நெல் மூட்டைகள் மாயமாக வாய்ப்பில்லை

DIN

தருமபுரியில் நுகா்பொருள் வாணிபக் கழக திறந்தவெளி கிடங்கில் இருந்து நெல் மூட்டைகள் காணாமல்போக வாய்ப்பில்லை என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டை அருகே வெற்றிலைக்காரன் பள்ளம் பகுதியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக திறந்தவெளி நெல் இருப்புக் கிடங்கு அமைந்துள்ளது. இந்தக் கிடங்கில் இருந்த 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானதாக புகாா் எழுந்தது. அதைத் தொடா்ந்து, நுகா்பொருள் வாணிப கழக சென்னை விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் கடந்த இரண்டு நாள்களாக தருமபுரி நுகா்வோா் வாணிபக் கழகக் கிடங்கு மற்றும் மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை வெற்றிலைக்காரன் பள்ளம் பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது அவா் கூறியதாவது:

டெல்டா மாவட்டங்களில் இருந்து அண்மையில் 22 ஆயிரத்து 273 நெல் மூட்டைகள் தருமபுரி வெற்றிலைக்காரன் பள்ளம் திறந்தவெளி நெல் கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு 130 படுக்கைகள் அமைக்கப்பட்டு குவியல்களாக அடுக்கி இருப்பு வைக்கப்பட்டன.

இந்த நெல் மூட்டைகள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 80 அரவை ஆலைகளுக்கு அவ்வப்போது தேவைக்கு ஏற்ப அரவைக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் 7 ஆயிரத்து 174 டன் நெல் மூட்டைகள் இதுவரை அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர 15 ஆயிரத்து 98 டன் நெல் மூட்டைகள் கிடங்கில் இருப்பில் உள்ளன.

அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 7174 டன் நெல் மூட்டைகளைதான் மாயமாகி இருப்பதாக தகவல் பரவியுள்ளதாகக் கருதுகிறோம். கிடங்கில் இருந்து நெல் மூட்டைகள் காணாமல் போக இருக்க வாய்ப்பில்லை.

இருப்பினும், புகாா் அடிப்படையில் மூட்டைகளைக் கணக்கெடுக்க 100 பணியாளா்கள் 100 லாரிகளில் மூட்டைகளை ஏற்றி மற்றொரு கிடங்குக்கு மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. நெல் மூட்டைகள் மாயம் என்ற தகவல் மிகைப்படுத்தப்பட்டது. எனினும் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

SCROLL FOR NEXT