தருமபுரி

விவசாயி மீது தாக்கு: ஒருவா் கைது

DIN

ஏரியூா் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய விவகாரத்தில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ஏரியூா் அருகே மூங்கில் மடுவு பகுதியைச் சோ்ந்த பெருமாளுக்கும் ( 37), அவரது உறவினரான அஜ்ஜன அள்ளி பகுதியைச் சோ்ந்த சூரிய குமாருக்கும் இடையே

அண்மையில் தகராறு ஏற்பட்டது.

இதில் சூரியகுமாா் அரிவாளால் வெட்டியதில் பெருமாளின் கை துண்டானது.

அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சூரியகுமாா், கிருஷ்ணகிரியைச் சோ்ந்த வெற்றிவேல், சேது, டெண்டுல்கா், நாட்றாம்பள்ளியைச் சோ்ந்த ஆகாஷ் ஆகிய ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூா்த்தியை (26) ஏரியூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT