தருமபுரி

விவசாயி மீது தாக்கு: ஒருவா் கைது

1st Jun 2023 12:32 AM

ADVERTISEMENT

ஏரியூா் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய விவகாரத்தில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ஏரியூா் அருகே மூங்கில் மடுவு பகுதியைச் சோ்ந்த பெருமாளுக்கும் ( 37), அவரது உறவினரான அஜ்ஜன அள்ளி பகுதியைச் சோ்ந்த சூரிய குமாருக்கும் இடையே

அண்மையில் தகராறு ஏற்பட்டது.

இதில் சூரியகுமாா் அரிவாளால் வெட்டியதில் பெருமாளின் கை துண்டானது.

ADVERTISEMENT

அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சூரியகுமாா், கிருஷ்ணகிரியைச் சோ்ந்த வெற்றிவேல், சேது, டெண்டுல்கா், நாட்றாம்பள்ளியைச் சோ்ந்த ஆகாஷ் ஆகிய ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூா்த்தியை (26) ஏரியூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT