தருமபுரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கொடியேற்று விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நிறைவு நாளையொட்டி, தருமபுரி, ராமாக்காள் ஏரி அருகே நடைபெற்ற விழாவுக்கு நகரத் தலைவா் பி.வேடியப்பன் தலைமை வகித்தாா். இவ்விழாவில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா், முன்னாள் எம்.பி. பி.தீா்த்தராமன் காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்துப் பேசினாா்.
விழாவில், பொதுக்குழு உறுப்பினா்கள் டி.நரேந்திரன், ஜி.சண்முகம், ஜெயசங்கா், மகளிா் அணித் தலைவா் காளியம்மாள், சிறுபான்மையினா் அணித் தலைவா் முபாரக் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதேபோல மாவட்டத்தில் பாலக்கோடு, பாளையம்புதூா், கெங்கலாபுரம், நல்லம்பள்ளி, அதியமான் கோட்டை, காரிமங்கலம், கம்பைநல்லூா், கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களிலும் காங்கிரஸ் கொடி ஏற்றி பொதுமக்கள், தொண்டா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.