மொரப்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவா் அமல்ராஜ் (52). இவா், பள்ளிக்குச் செல்வதற்காக தருமபுரி-மொரப்பூா் நெடுஞ்சாலையில் காரில் சென்றுள்ளாா். அப்போது ஜடையம்பட்டி அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது அவரது காா் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நைனாகவுண்டம்பட்டியைச் சோ்ந்த பழனிசாமி (45), எச்.புதுப்பட்டியைச் சோ்ந்த வெங்கடேசன் (52) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் குறித்து மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.