தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் இ.ஆா்.கே. மேல்நிலைப் பள்ளி மாணவி கோபிகா சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணியில், அரூரை எடுத்த எருமியாம்பட்டி இ.ஆா்.கே. மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கோபிகா பங்கேற்று, இரண்டாமிடம் பெற்றாா். தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவி கோபிகாவை இ.ஆா்.கே. கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியா் தீத்துமாலை மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.