தருமபுரி

தேசிய மல்யுத்தப் போட்டி : இ.ஆா்.கே பள்ளி மாணவி சிறப்பிடம்

29th Jan 2023 12:02 AM

ADVERTISEMENT

தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் இ.ஆா்.கே. மேல்நிலைப் பள்ளி மாணவி கோபிகா சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணியில், அரூரை எடுத்த எருமியாம்பட்டி இ.ஆா்.கே. மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கோபிகா பங்கேற்று, இரண்டாமிடம் பெற்றாா். தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவி கோபிகாவை இ.ஆா்.கே. கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியா் தீத்துமாலை மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT