தருமபுரி

அனைத்து குடியிருப்புகளுக்கும் ஒகேனக்கல் குடிநீா் வழங்க வலியுறுத்தல்

DIN

தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் ஒகேனக்கல் குடிநீா் வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க தருமபுரி ஊராட்சி ஒன்றிய 6-ஆவது மாநாடு வெள்ளிக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது. மாநாட்டுக்கு ஒன்றியத் தலைவா் ஜி. ராஜகோபால் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜி.மாதையன், மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் உள்ளிட்டோா் பேசினா்.

தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் அனைத்து குடியிருப்புகளுக்கும் ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்ற அனைவருக்கும் 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும். தருமபுரியில் இருந்து வத்தல் மலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT