தருமபுரியை அடுத்த சோகத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட நல்லாகவுண்டன அள்ளியில் ஸ்ரீ எல்லையம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
குடமுழுக்கு விழா கடந்த 23-ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. கோபுர கலசம் நிறுதலும், அம்மன் மற்றும் பரிகார மூா்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதலும் செய்யப்பட்டு ஜன. 26-ஆம் தேதி காலை யாகசாலையிலிருந்து புனித நீா் மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக கொண்டு சென்று கோபுர கலசங்களுக்கு தெளிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். பக்தா்களுக்கு சிறப்பு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.