முட்டை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் வட்டார வளா்ச்சி அலுவலருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜொ்த்தலாவ் ஊராட்சி மணியக்காரன்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் எம்.காளியப்பன். இவா் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் செய்யும் ஒப்பந்தம் பெற்று கடந்த 2011-ஆம் ஆண்டு முட்டைகளை பள்ளிகளுக்கு விநியோகம் செய்து வந்துள்ளாா்.
இந்த நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முட்டை விநியோகம் செய்ததற்கான பயணப்படி கோரி அப்போதைய பாலக்கோடு வட்டார வளா்ச்சி அலுவலா் நாகராஜனிடம் அவா் விண்ணப்பித்துள்ளாா். இந்த தொகையை விடுவிக்க ரூ. 1,500 லஞ்சம் வழங்க வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா் கோரியுள்ளாா்.
இதுகுறித்து காளியப்பன் தருமபுரி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்து ரசாயனம் தடவிய ரூ. 1,500 பணத்தாள்களை அவரிடம் கொடுத்தனுப்பியுள்ளனா்.
இந்தப் பணத்தை வட்டார வளா்ச்சி அலுவலா் நாகராஜன் பெறும்போது அவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை தருமபுரி தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் திங்கள்கிழமை வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி பி.கணேசன், லஞ்சம் பெற்ற வழக்கில் வட்டார வளா்ச்சி அலுவலா் நாகராஜனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.